சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசுகையில், திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராசபுரம் கிராமத்தில் சிப்காட தொழில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கும்மிடிப்பூண்டி, மப்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதி மற்றும் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததைப் போல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்….
திருவள்ளூரில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை
previous post