‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மனதை கவருது மலர் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. பிரையண்ட் பூங்காவில் 59-வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, சின்சான், ஸ்பைடர் மேன், 20 அடி நீளம் கொண்ட டைனோசர், மயில் உள்ளிட்ட உருவங்களை மலர்களை கொண்டு அலங்கரித்துள்ளனர். காய்கனிகளால் அம்மன் சிலை, சிங்கம், மீன் வடிவமைக்கப்பட்டுள்ளது.