தஞ்சாவூர், ஜன.19: தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்ப்பல்கலைக் கழக முகப்புக் கட்டிடத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் நீலகண்டன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இணைப்பேராசிரியர் கோவைமணி, மக்கள் தொடர்பு அலுவலரும் இணைப்பேராசிரியர் மொழி பெயர்ப்புத்துறை தலைவர் முனைவர் முருகன், பொறியியல் பிரிவு சுவாமிநாதன், மற்றும் கல்வியாளர்கள், அலுவல் நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.