குலசேகரம், நவ.9:திருவட்டார் அருகே கேசவபுரம் குலக்கடவிளை பகுதியை சேர்ந்தவர் சாது புஸ்பராஜ் (61). கூலித்தொழிலாளி. திருவட்டார் ஜங்சன் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சாது புஸ்பராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சாது புஸ்பராஜ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் 50 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
திருவட்டார் அருகே பைக்கில் மது கடத்தியவர் கைது
previous post