Monday, May 13, 2024
Home » திருவட்டார் அருகே கட்டுமான பணியின் போது கால்தவறி கீழே விழுந்து கட்டிட தொழிலாளி பலி

திருவட்டார் அருகே கட்டுமான பணியின் போது கால்தவறி கீழே விழுந்து கட்டிட தொழிலாளி பலி

by Karthik Yash

குலசேகரம், ஜன.19: திருவட்டார் அருகே மங்காடு பகுதியை சேர்ந்தவர் அருண் (34). கட்டிட தொழிலாளி. அவரது மனைவி தனலெட்சுமி (25). அருண் சம்பவத்தன்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணிக்காக சென்றிருந்தார். அப்போது சிமெண்ட் மூடையை தலையில் சுமந்தவாறு கட்டுமான பணி நடக்கும் வீட்டின் மேல்பகுதிக்கு ஏறினார். அப்போது கால்தவறி சிமெண்ட் மூடையுடன் கீழே விழுந்தார். இதில் அவர கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து திருவொற்றியூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அருணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அருண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seven + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi