திருப்பூர், ஜன. 28: திருப்பூர் மாவட்ட எஸ்பி உட்பட ஒரே நாளில் நேற்று மாநில முழுவதும் 11 எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக கடந்த ஒரு வருடமாக சாமிநாதன் பணியாற்றி வந்தார். இவர் சென்னை தென்பகுதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுபோல் எஸ்பி சாமிநாதனுக்கு பதிலாக திருப்பூர் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், திருப்பூர் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை அண்ணாநகரில் போலீஸ் துணை கமிஷனரான பணியாற்றி வந்த ரோகித்நாதன் ராஜகோபால், கோவை வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.