திருபுவனம், ஜன. 28: திருப்புவனம் அருகே கட்டமன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75வது குடியரசு தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களின் பேச்சு போட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கொந்தகை ஊராட்சி மன்ற தலைவி தீபலட்சுமி ஜெயவேல், கிராம தலைவர் மகாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து சேவியர் முன்னிலை வகித்தார்.
ஆங்கில ஆசிரியர் அமுத லட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக கணித ஆசிரியர் தெய்வேந்திரன் நன்றி கூறினார். திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் மு.சத்யன், சாந்தி ஆகியோர் முன்னிலையில் ஒன்றியக்குழு தலைவர் தூதை சின்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, சுப்பையா, ஈஸ்வரன் உட்பட அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.