திருப்பரங்குன்றம், மே 12: திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வெற்றி, வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சியினர் கடந்த மே 17ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருப்பரங்குன்றம் முதல் திருநகர் வரை டூவீலரில் பேரணியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம், திருநகர் போலீசார் பாஜகவினர் 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறிய பாஜவினர் மீது வழக்கு
previous post