திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே உள்ள கதவாலம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தன்(70). இவருக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து நந்தன் நேற்று முன்தினம் ஊர் மக்கள் மத்தியில் பஞ்சாயத்து பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமியை, நந்தன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நந்தன் வந்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …