Sunday, May 12, 2024
Home » திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

by Ranjith

 

திருக்காட்டுப்பள்ளி, டிச.24: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் பழமார்நேரி சாலை மாலா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, காவல் துறை, மாற்று திறனாளிகள் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் கணினியுடன் அரசு அதிகாரிகள் அமர்ந்து மக்களிடம் பெற்ற மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.

முகாமை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் .மாகின்அபுபக்கர், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முகாமில் 408 மனுக்கள் பெறப்பட்டன. 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 398 மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டன. முகாமில் பூதலூர் வட்டாட்சியர் அ.மரியஜோசப், பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

18 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi