திருக்காட்டுப்பள்ளி, மார்ச்19: சாமிநாதபுரம் அறுவடை செய்த வயல்களில் கிடை போடுவதற்காக செம்மறி ஆடுகள் மேய்க்கப்பட்டன. திருக்காட்டுப் பள்ளி அருகே சாமிநாதபுரம் பகுதிகளில் சம்பா தாளடி அறுவடை முடிந்து தற்போது தரிசு நிலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கணக்கான செம்மறி ஆடுகளை தொழிலாளர்கள் மேய்த்து வருகின்றனர்.ராமநாதபுரம் பகுதியிலிருந்து கிடை ஆடுகள் போடுவதற்காக தஞ்சைமாவட்டப்பகுதியில் வந்து மாத கணக்கில் டெண்ட் அமைத்து விவசாயிகள் தங்களது வயல்களில் கிடை அமைத்து வருகின்றனர். அதேபோன்று நேற்று சாமிநாதபுரம் பகுதியில் உள்ள வயல்களில் செம்மறி ஆடுகளை வைத்து மேய்த்து வருகின்றனர்.