தேனி, ஆக. 4: தேனி அருகே ரெங்கபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் டான்பெட் நிறுவனத்தின் திரவநிலை உரங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேனி அருகே ரெங்கபுரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் டான்பெட் துணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. பெரியகுளம் சரக கூட்டுறவு துணைபதிவாளர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
டான்பெட் நிறுகூனத்தின் மூலமாக மண்வளம் காத்து, தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய வேளாண்மை இயக்குநர் ராஜேஷ் வரவேற்று பேசினார்.முகாமின்போது, டான்பெட் நிறுவனத்தின் மூலமாக மண்வளம் காத்து மகசூல் பெருக்கும் வகையில் டான்பெட் நிறுவனம் மூலமாக தயாரிக்கப்பட்ட திரவநிலை உயிர்உர வகைகள், திரவ உயிர் பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள் நீரில் கரையும் உரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து செயல்விளக்கமளிக்கப்பட்டது. மேலும், டான்பெட் உரங்களை என்னென்ன பயிர்களுக்கு எந்தெந்த நேரங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.