சென்னை: திமுக பிரமுகர் கொலையில் தலைமறைவாக இருந்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி அருகே உள்ள பல்லவன் சாலை காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன்(36). திமுக பிரமுகரான இவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டின் அருகே பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் மதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்த வினோத்(எ)வினோத்குமார்(23) என்பவர் தனது தாயுடன் மதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து மதனை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்த வினோத்(எ)வினோத்குமார், கணபதி(24), நரேந்திரன்(21), உசேன்(19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பல்லவன் சாலை காந்தி நகர் பி பிளாக்கை சேர்ந்த அஜய்(எ)அஜய்குமார்(21), மதி(19), ரமணா(19) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது….