திருப்பூர், செப்.6: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்தணம்பாளைய் பகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில், மாநகர செயலாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று (6ம் தேதி) வீரபாண்டி, வாலிபாளையம், நல்லூர் பகுதி பாக முகவர்களுக்கும், நாளை (7ம் தேதி) வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதி, 8ம் தேதி கொங்கு நகர், 9ம் தேதி அண்ணா காலனி, 10ம் தேதி வேலம்பாளையம் பகுதி பாகமுகவர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.