திருக்கழுன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில், திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் யுவராஜ், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கட்சியின் தலைமை திமுக பேச்சாளர் குடியாத்தம் புவியரசி சிறப்புரையாற்றினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் அரசு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பச்சையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகீர் உசேன், பேரூர் மாணவரணி அமைப்பாளர் அழகிரி மற்றும் சுகுமாரன், செங்குட்டுவன், கார்த்திக், பாபு, மணிகண்டன், மதன்குமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி, சத்தியமூர்த்தி, தேன்மொழி இளங்கோ உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.