திருப்புவனம், செப்.28: திருப்புவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் திமுக அரசின் சாதனைகளை சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பில் நோட்டீஸ் அச்சடித்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று சிவகங்கை மாவட்ட திமுக விவசாயிகள் அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன் தலைமையில் அப்பாச்சாமி, இளங்கோவன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காத்தமுத்து, படித்துறை, வழக்கறிஞர் தங்க பாலமுருகன் உட்பட திமுகவினர் திருப்புவனம் பஸ் நிறுத்தம், கடைவீதிகளில் மற்றும் பொது மக்களுக்கு நோட்டீஸை விநியோகம் செய்தனர்.