திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல் மண்டலத்திற்கு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 16 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து போக்குவரத்து பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை நேற்று நடத்தியது. பொது மேலாளர் டேனியல் சாலமன் தொடங்கி வைத்தார். முகாமில் டிரைவர், கண்டக்டர், அலுவலக பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர்.