திண்டிவனம், ஏப். 12: திண்டிவனத்தில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனத்தில் நாளுக்கு நாள் போதை ஊசி, மாத்திரை விற்பனை மற்றும் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திண்டிவனம் போலீசார் போதை மாத்திரை விற்பனை மட்டுமில்லாமல் பயன்படுத்திய 7 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று திண்டிவனம் சின்ன முதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று, ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 30 போதை மாத்திரைகள், 5 போதை ஊசிகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பேரில் அதே பகுதியை சேர்ந்த உதயக்குமார் மகன் சூரியா(22), கிடங்கல் 2 சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் பொற்செல்வன் (20) ஆகிய இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த போதை ஊசி, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டிவனத்தில்
போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது
previous post