கரூர், ஏப்.14: திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழக முழுவதும் திமுக நிர்வாகிகள் புதிதாக கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். இதனடிப்படையில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி மேற்பார்வையில் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் மணவாடி ஊராட்சியில் ஒன்றிய கழக செயலாளர் எம்.ரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மணவாடி ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய அவைத் தலைவருமான ஏ.பி. கந்தசாமி, மணவாடி பிஸ்மிநகரில் புதிதாக 100 உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டார்.மேலும், மணவாடி ஊராட்சி பகுதியில் இன்னும் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.