Friday, May 17, 2024
Home » தரகம்பட்டி அரசு பள்ளி மாணவர் இலக்கிய மன்ற போட்டியில் மாநில அளவில் வெற்றி

தரகம்பட்டி அரசு பள்ளி மாணவர் இலக்கிய மன்ற போட்டியில் மாநில அளவில் வெற்றி

by Neethimaan

தோகைமலை, ஏப். 12: கரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி பள்ளிக் கல்வித்துறை சார்பாக 2022-2023ம் ஆண்டிற்கான பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள் விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய மற்றும் மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இதனை அடுத்து அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர். இதில் இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் தியைிடுதல், மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த போட்டிகள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ மாணவியர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கடவூர் அருகே தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் சஞ்சய்தருண் என்ற மாணவன் இலக்கிய மன்ற போட்டியில் நீ விரும்பி படித்த நூல் என்ற தலைப்பில் பங்குபெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். பின்னர் மாநில அளவில் நடந்த இதேபோட்டியில் கலந்து கொண்டார். மாநில அளவில் நடந்த 6 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளிலும் மாநில அளவில் தலா 25 மாணவர்கள் என்று மொத்தம் 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் கரூர் மாவட்டத்தில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளநிலையில் தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய்தருண் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலி டெய்சி உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவரின் கிராம பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். மாணவர் சஞசய்தருணின் தந்தை மாணிக்கம் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் தாயார் நித்யா என்பவர் கிராம செவிலியராக வேலை செய்து வருகிறார். மாணவர்கள் மத்தியில் கல்வியின் ஆர்வத்தை உயர்த்தும் நோக்கிலும், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்காக அமெரிக்கா நாட்டிற்கு அழைத்து செல்வதால் தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

17 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi