சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள் விடுக்கும் பத்திரிகைச் செய்தி; எனக்கு கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்று எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் வரை நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்….