Monday, June 17, 2024
Home » தமிழக வீரர் மாரியப்பன் கொரோனா அறிகுறி காரணமாக தனிமை: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் இந்திய கொடி ஏந்துகிறார் தேக் சந்த்

தமிழக வீரர் மாரியப்பன் கொரோனா அறிகுறி காரணமாக தனிமை: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் இந்திய கொடி ஏந்துகிறார் தேக் சந்த்

by kannappan

டோக்கியோ: கொரோனா அறிகுறி காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் எனவும் அவருக்கு பதிலதக தேக் சந்த் ஏந்துவாா் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.  ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப். 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங்  ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராஒலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில்  மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் இந்திய கொடியை ஏந்தி செல்கிறார்….

You may also like

Leave a Comment

twenty + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi