Monday, June 3, 2024
Home » தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் தகவல்: தமிழகத்தில் 2 இடங்களில் விரைவில் திருப்பதி கோயில் அமைக்கப்படும்

தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் தகவல்: தமிழகத்தில் 2 இடங்களில் விரைவில் திருப்பதி கோயில் அமைக்கப்படும்

by kannappan

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக ஏ.ஜே.சேகர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி பொறுப்பேற்றதற்கான கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகக்குழு உறுப்பினர் சங்கர், வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி எம்.பி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2வது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை தி.நகரில் அமைந்துள்ள கோயிலின் தலைவராகவும், தமிழகத்தில் தேவஸ்தானம் சார்பில் உள்ள கோயில்களுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன். கடந்த 13 வருடமாக கிடப்பில் இருந்த பத்மாவதி அம்மாள் தாயாரின் கோயில் அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மலையடிவாரத்தில் பசுக்களுக்கென்று ஒரு கோயில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி ஆந்திர முதல்வர் கோயிலை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும், சென்னையில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு வரும் வழியில் தேவஸ்தானம் சார்பில் இலவச தங்கும் விடுதிகள் செய்து தரப்படும். நீண்ட நாள் கோரிக்கையாக தமிழகத்தில் திருப்பதி போன்ற கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்போது அரசு சார்பில் இரண்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக பணிகள் கிடப்பில் இருந்தது. எனவே, மீண்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் அந்த நிலத்தை தேவஸ்தானத்திற்கு வழங்கினால் உடனடியாக அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார்.இதேபோல், ராயப்பேட்டையில் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோயில் நிலங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீட்டு வருகிறார். இது மிக மிக வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. டைரி விவகாரம் குறித்து 2016ம் ஆண்டிலேயே நான் தெரிவித்துவிட்டேன். அந்த டைரியை கொண்டுவந்து காண்பியுங்கள் என்று நான் கேட்டும் யாரும் கொண்டுவந்து இதுவரை காண்பிக்கவில்லை. பதவி வரும் போது இதுபோன்ற வதந்திகள் வந்துகொண்டு தான் இருக்கும். இவ்வாறு ஏ.ஜே.சேகர் கூறினார்….

You may also like

Leave a Comment

four + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi