சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அன்னை தமிழில்’ வழிபாடு ெசய்ய பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தினசரி 150 பக்தர்களும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 140 பக்தர்களும், பழநி தண்டாயுதபணி சுவாமி கோயிலில் 200 பக்தர்களும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 180 பக்தர்களும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் 54 பக்தர்களும், கோவை, தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயிலில் 50 பக்தர்களும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் 40 பக்தர்களும், பண்பொழி, திருமலை குமாரசுவாமி கோயிலில் 38 பக்தர்களும், கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 33 பக்தர்களும், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 66 பக்தர்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னை தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….