Saturday, June 1, 2024
Home » தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது: 21 நாளில் தமிழகத்தில் 14,966 பேருக்கு தொற்று; சென்னையில் 5,902 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது: 21 நாளில் தமிழகத்தில் 14,966 பேருக்கு தொற்று; சென்னையில் 5,902 பேர் பாதிப்பு

by kannappan

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த டிசம்பர் மாதம் வரை குறைந்து வந்தது. அதாவது 83 நாட்களுக்கு பிறகு மார்ச் மாதம் முதல் மறுபடியும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி 479 பேர் ெதாற்று ஏற்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,51,542 ஆக உயர்ந்தது. மார்ச் 5ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கும் மேல் அதிரிக்க தொடங்கியது. இதற்கிடையில் 17ம் தேதிக்கு பிறகு பாதிப்பு இரண்டு மடங்கானது. அதன்படி 17ம் தேதி 945 பேர், 18ம் தேதி 989 பேர், 19ம் தேதி 1,087, 20ம் தேதி 1,243 பேர் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதைப்போன்று உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில நேற்று 466 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை கடந்த 21 நாட்களில் தமிழகத்தில் 14,966 பேரும், சென்னையில் 5,902 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 8,66,982ஆக உயர்ந்துள்ளது.  நேற்று மட்டும் 668 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 7,903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகள் மூடல்?சென்னை, மார்ச் 22: கொரோனா தொற்று எண்ணிக்கை குைறந்து வந்ததால்,  ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, 9  முதல் பிளஸ் 1 வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று தெரிவித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள் நடத்துவது என்று பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இடையே கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கல்லூரி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.  விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியருக்கு தொற்று இருந்தாலும், அவர்களை தனியே தங்க வைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவ மாணவியர் செல்போனில் பேசி, வாட்ஸ்அப் வீடியோ, மூலம் தங்கள் பெற்றோருக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். இந்த பிரச்–்னை தற்போது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதனால் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். கொரோனா தொற்று இருப்பதால் அனுப்ப முடியாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்து வருகின்றனர். மேலும் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கின்றனர். இது மாணவர்கள் இடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்து வருவதால் ஏப்ரல் 2ம் தேதி முதல் கல்லூரிகளை மூடப் போவதாக சில தனியார் கல்லூரிகள் அறிவித்துள்ளன. அரசுக் கல்லூரிகள் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கல்லூரிகளை மூடுவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்….

You may also like

Leave a Comment

five + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi