தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 738 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் எல்கேஜி முதல் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை, 85 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுவது மே 18ம் தேதி வரை உள்ளது. எனவே, பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. சேர்க்கையில் சந்தேகம் இருந்தால் 14417 என்ற உதவி எண்ணுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம்.