திருப்பத்தூர் ஜூன் 12: திருப்புத்தூர் 2வது வார்டு புதுப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் தேவராஜ்(27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வேலைக்கு போகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜனை வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லுமாறு பழனிக்குமார் கூறியுள்ளார். இதனால் இவருக்கும்ம் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது தந்தையை வலது கண் அருகே தேவராஜ் குத்தியுள்ளார். நேற்று பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில், திருப்புத்தூர் போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.