Friday, May 10, 2024
Home » தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து முதியவர் பலி

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து முதியவர் பலி

by kannappan

ஆவடி: திருநின்றவூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்பர் பாஷா(64). இவரது மனைவி கவுசிக். இவர்களுடன் மகன் தாஜூதீன், மருமகள் சமீனா பேகம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அக்பர் பாஷா வீட்டுக்குள் இருந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென கால் தவறி தொட்டிக்குள் விழுந்தார். இதனை யாரும் கவனிக்காததால், 6 அடி ஆழமுள்ள தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கி அக்பர் பாஷா பரிதாபமாக பலியானார். பின்னர், வெகு நேரம் கழித்து உறவினர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது, தண்ணீர் தொட்டியில் அக்பர் பாஷா சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi