ஜெயங்கொண்டம், ஜூன் 10: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்ஐ திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் குடிகாடு கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி(52) என்பவர் போலீசாரை கண்டு ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரணை செய்த போது 15 வயது சிறுவர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், ரவியை கைது செய்து ரூ.6,000 மதிப்புள்ள 6.5 கிலோ ஹான்ஸ், 2.3கிலோ பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.