சமயபுரம், செப்.1: திருச்சி சமயபுரம் கடைவீதி சந்தை கேட் பகுதியில் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 டீக்கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. மயபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் சமயபுரம் கடைவீதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது சமயபுரம் சந்தை கேட் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீ க்கடை மற்றும் பக்கத்தில் இருந்த மற்றொரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். ம் கடைகளில் விற்பனை செய்ய குடோன் அமைத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்ள்கள் மற்றும் குடோன்களை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோன் ஆகியவற்றிற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.