Saturday, May 25, 2024
Home » தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 4500 டன் நெல், அரசி விருதுநகர் சேலம், கோவைக்கு அனுப்பிவைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 4500 டன் நெல், அரசி விருதுநகர் சேலம், கோவைக்கு அனுப்பிவைப்பு

by Dhanush Kumar

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக விருதுநகருக்கும், 2500 டன் அரிசி சேலம் மற்றும் கோயம்புத்தூருக்கும் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுவதுடன், கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும். இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் 2000 டன் நெல் மூட்டைகள், 2500 டன் அரிசி லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் 42 வேகன்களில் அரவைக்காக விருதுநகருக்கும், தலா 1250 டன் அரிசி சேலம் மற்றும் கோயம்புத்தூருக்கும் பொதுவிநியோகத் திட்டத்திற்காக தலா 21 வேகன்களில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

20 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi