Sunday, June 16, 2024
Home » தஞ்சாவூர் பெரிய கோயிலில் உழவாரப்பணி பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உழவாரப்பணி பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

by Francis

 

தஞ்சாவூர், ஜூலை 17: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் உழவாரப்பணி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள பழங்கால கோயில்கள் சுத்தம் செய்யப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நேற்று நடைபெற்றது. இதற்கு இறை பணி மன்ற நிறுவனர் கணேசன் தலைமை வகித்தார். இம்மன்றத்தை சேர்ந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து 250 பேர் கலந்து கொண்டு வளாகத்தில் இருந்த தேவையில்லாத புல் செடிகளை அகற்றி சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றினர். இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை-2005 இயக்கம், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், உழவாரப்பணி குழு நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி ,செழியன், சீனிவாசன்,முத்தமிழ் ,ஜெய்சங்கர் ,விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து பெரிய கோயிலில் இருந்து உழவாரப்பணி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணியானது தெற்கு வீதி , திலகர் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்றது. பின்னர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் அந்தந்த கோயில்களில் சுத்த பணியில் ஈடுபட்டனர். மேலும் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்று மாலையில் பெரிய கோயிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளன.

You may also like

Leave a Comment

twenty + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi