தஞ்சாவூர், பிப்.2: சமூகப்பணித்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2024ஐ முன்னிட்டு, பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் அவசர கால உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயண நிகழ்வினை, தஞ்சை புதிய பேருந்து நிலைய வாயில் அருகில் தஞ்சை நகர போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரி சமூகப்பணித்துறை பேராசிரியர்கள் முத்துக்குமார், வனிதா மற்றும் கோபி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, சமூகப்பணித்துறை மாணவ – மாணவியர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், ஆற்றுப் பாலம், ரயிலடி, ராஜராஜ சோழன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பட்டுக்கோட்டை பைபாஸ் போன்ற பகுதிகளில் நடந்தது.