Thursday, June 13, 2024
Home » டெல்லியில் ஒரேநாளில் 888 பேருக்கு கொரோனா

டெல்லியில் ஒரேநாளில் 888 பேருக்கு கொரோனா

by kannappan

புதுடெல்லி: டெல்லியில் ஒரேநாளில் 888 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 7 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 67,418 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 48,981 ஆர்டி பிசிஆர் சோதனைகள் ஆகும். இந்த சோதனைகள் முடிவில் 888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பரவும் சதவீதம் 1.03ல் இருந்து 1.32ஆக உயர்ந்தது. மேலும் தொடர்ந்து 3ம் நாளாக 800க்கும் மேல் தொற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலியானவர்கள் எண்ணிக்கையும் நேற்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 10,963ஆக உயர்ந்தது. பிப்ரவரி 4ம் தேதிக்கு பிறகு நேற்றுதான் டெல்லியில் அதிகபட்ச கொரோனா பலி ஆகும். ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையும் 3,618ல் இருந்து 3,934ஆக உயர்ந்துள்ளது. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1,893ல் இருந்து 2,067ஆக உயர்ந்தது. கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் 766ல் இருந்து 805 ஆனது….

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi