டெல்லி: டெல்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மக்களவையில் தாக்கல் செய்தார். டெல்லி கிழக்கு, வடக்கு, தெற்கு, மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்லி மாநகராட்சி மட்டும் தனியாக செயல்படும்; மற்ற 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறது. …