விருதுநகர்: சம்பளம், பிஎப் எண் வழங்கவில்லை என சிவகாசி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி மாநகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் அளித்த மனுவில், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம் 1 மற்றும் 2ல் கடந்த 2014 முதல் டெங்கு ஒழிப்பு பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். பிஎப் தொகை பிடித்தம் செய்வதற்கான பிஎப் எண் தெரிவிக்கவில்லை. பிஎப் பிடித்து கட்டுகின்றனரா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 3 மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. தற்போது தினசரி ஊதியம் ரூ.208 மட்டும் வழங்கப்படும் என கூறுகின்றனர். கலெக்டர் தலையிட்டு உயர்த்தப்பட்ட ஊதியம், பிஎன் எண், பிஎப் பணம் தொடர்பான விபரங்களை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.