தேவதானப்பட்டி, ஆக 1: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் அஹ்ரகாரதெருவைச் சேர்ந்தவர் கணேசன்(42). இவர் தனது டூவீலரில் குடும்பத்துடன் வத்தலக்குண்டு சென்றுவிட்டு, அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி காட்ரோடு அருகே வரும்போது பின்னால் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேசன், அவரது மனைவி சுகன்யா(35), மகன் யுவராஜ்பாண்டி(4) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வேன் டிரைவர் முருகதாஸ்(47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.