தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரைச் சேர்ந்தவர் குமார் மனைவி உமா(36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து நிலைதடுமாறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே உமா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.