Sunday, June 16, 2024
Home » டூவீலரில் பதுங்கிய பாம்பு பிடிப்பு வேடசந்தூரில் பரபரப்பு

டூவீலரில் பதுங்கிய பாம்பு பிடிப்பு வேடசந்தூரில் பரபரப்பு

by Ranjith

 

வேடசந்தூர், மே 3: வேடசந்தூர் கடைவீதி பகுதியில் நாகராணி என்பவர் தையல் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது டூவீலரை கடை முன்பு நிறுத்தி விட்டு பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு நபர், நாகலட்சுமியின் டூவீலருக்குள் பாம்பு ஒன்று சென்றதை கண்டு அவரிடம் தெரிவித்தார். இதனால் பதற்றமடைந்த நாகராணி, இதுகுறித்து உடனே வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டூவீலரில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கம் பாம்பை பிடித்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பாம்பை சாக்கு பையில் போட்டு வனப்பகுதியில் விட எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

11 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi