மதுரை, டிச. 17: மதுரை மாநகராட்சியில் வடக்கு மண்டல குறைதீர் முகாம் டிச.19ம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளமண்டல அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில்,மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்கலாம். குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி. தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து உடனடியாக தீர்வு காணலாம் என மாநராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிச.19ல் வடக்கு மண்டல குறைதீர் முகாம்
previous post