Sunday, May 19, 2024
Home » ஜெயலலிதா சமாதியில் கண்கலங்கிய சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

ஜெயலலிதா சமாதியில் கண்கலங்கிய சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

by kannappan

சென்னை: அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்  சசிகலா. ஜெயலலிதா சமாதிக்கு போகட்டும், கண் கலங்கட்டும். இந்த நடிப்புக்கு ‘ஆஸ்கர்  அவார்டு’ வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், அதிமுகவில் அவருக்கு  எப்போதும் இடம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்துக்க தினசரி லட்சக்கணக்கான பேர் போவார்கள். அதேமாதிரி லட்சத்தில் ஒருவராக சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அவர், ஜெயலலிதா சமாதிக்கு போனது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவது இல்லை. அதிமுக மிகப்பெரிய யானை. பெரிய பலம் பெற்றது. ஏதோ கொசு, யானை மீது உட்கார்ந்து, நான்தான் யானையை தாங்கிக் கொள்கிறேன் என்றால், மக்கள் இதை எள்ளி நகையாடும் விஷயமாகதான் இருக்கும். ஜெயலலிதா சமாதிக்கு எல்லோரும் போறாங்க, சசிகலாவும் நேற்று போயுள்ளார். 17ம் தேதி (இன்று) தான் அதிமுக பொன்விழா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி (நேற்று) எப்படி பொன்விழா ஆண்டு ஆகும். அதுகூட சசிகலாவுக்கு தெரியவில்லை. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு தார்மீக உரிமை கிடையாது. சட்டப்படியான விதிமீறல். அவர், வேண்டும் என்றே அதிமுக கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார். நாங்கள் நினைத்தால் தடுக்கலாம். ஆனால், நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க விரும்பவில்லை.அரசியலில் தனக்கு ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்றால், சசிகலாவுக்கு டி.டி.வி.தினகரன் அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுக கூடிய விரைவில் எனது கட்டுப்பாட்டில் வரும் என்று சசிகலா சொல்லிக் கொண்டே இருக்கலாம். அது நடக்காது. சசிகலா என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டே போகலாம். நாங்கள் எந்த தடையும் இல்லாமல் அதிமுகவை, நாங்கள் வழிநடத்தி வருகிறோம். சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த இடமும் கிடையாது. தேவைப்பட்டால் அமமுகவில் அவருக்கு பதவி கொடுக்கலாம். அறிக்கையில் எழுதி கொடுப்பதை கூறி, என்ன வேண்டுமானாலும் பேசலாம். மக்களின் உண்மையான தலைவராக ஜெயலலிதாதான் உள்ளார். இவரை தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்தான் சசிகலா. சமாதிக்கு போகட்டும், கண் கலங்கட்டும். இந்த நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், அதிமுக கட்சிக்காரர்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக கட்சியிலும் அவருக்கு எப்போதும் இடம் கிடையாது….

You may also like

Leave a Comment

16 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi