ஜெயங்கொண்டம், அக்.6: ஜெயங்கொண்டம் நகராட்சி அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி மாநகராட்சி அலுவலக மாநில தலைவர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஒரு நாள் மட்டும் நகராட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்துவிட்டு நுாதன போராட்டமாக பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் இளநிலை உதவியாளர் மற்றும் நகராட்சி மாநகராட்சி அலுவலக மாநில துணைச் செயலாளர் எஸ்தர்சோபா, மாநில பொருளாளர் சுவாமிநாதன், மாநில துணைத்தலைவர் மதிவாணன், ஜெயங்கொண்டம் நகராட்சி வருவாய் உதவியாளர் பிரேம்குமார், மகேஷ்குமார், பொறியியல் பிரிவு முருகேசன், சிவானந்தம், ரவிச்சந்திரன், கோகிலா ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பொது பணியாளர்கள், கணினி, மற்றும் சுகாதாரம், பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 17 அரசு ஊழியர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு நூதன போராட்டமாக பணியில் ஈடுபட்டனர்.