சாயல்குடி, ஜூன் 15: கடலாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார். கடலாடியிலுள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்வதற்காக நேற்று வந்தார். பதிவேடுகள் மற்றும் மருந்து,மாத்திரை இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பிறகு வெளி மற்றும் உள்நோயாளிகளிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர், மருந்தாளுனர், அறுவை சிகிச்சை உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பிரேத பரிசோதனை கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.