Tuesday, June 18, 2024
Home » ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமர் சந்திப்பிற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமர் சந்திப்பிற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

by kannappan

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 25 நிமிட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. முதல்-அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.மேலும், அவர் குறிப்பிட்டதாவது:* 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.* ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.* குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.* செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.* உலகின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்* திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.* மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். * சென்னை ஐகோர்ட்டின்  வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். * மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்* நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். * புதிய மின்சார சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.* இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என கூறினார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi