திருமங்கலம், ஜன. 7: பேரையூர் மற்றும் சாப்டூர் துணைமின் நிலையங்களில் ஜன.9ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரையூர் நகர், சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூலராபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, பாரபத்தி, தும்மநாயக்கன்பட்டி, சாப்டூர் நகர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும். இத்தகவலை திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.