சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் கந்தனுக்கு வாக்களிக்க கோரி மடிப்பாக்கத்தில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை திமுகவினர் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. …