சோளிங்கர், ஜூன் 12: சோளிங்கரில் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் போலீஸ் எஸ்ஐ சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோளிங்கர் கிழக்கு பஜார் தெரு பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று பிடித்ததில் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சோளிங்கர் குமரன் தெருவை சேர்ந்த விஜயன்(43) என்பதும், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதுடன் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விஜயனை கைது செய்தனர்.