தர்மபுரி, பிப்.12:தர்மபுரி டவுன் போலீஸ் எஸ்ஐ விஜயசங்கர் தலைமையில் போலீசார், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பென்னாகரம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 111 கிலோ குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ₹1.79 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, குட்கா கடத்தி வந்த குஜராத்தை சேர்ந்த சரண்குமார்(25), ராஜஸ்தானை சேர்ந்த விக்ரம்குமார்(21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், தொப்பூர் போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.