தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடி வஉசி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், பிளம்பிங் தொழிலாளி(63). இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது மேம்பாலத்தின் கீழ் வேகமாக வந்த மினிபஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செல்வராஜ் மீது பஸ்சின் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்த வடபாகம் போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.