Sunday, June 2, 2024
Home » சேதமான புயல் பாதுகாப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும்: மண்டபம் மக்கள் வலியுறுத்தல்

சேதமான புயல் பாதுகாப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும்: மண்டபம் மக்கள் வலியுறுத்தல்

by Ranjith

 

மண்டம், மார்ச் 13: மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பயன்பாடு இன்றி உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடத்தை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபத்தில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சிங்காரத்தோப்பு பகுதிக்கு செல்லும் சாலையின் அருகே புயல் பாதுகாப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம்.

இந்த கட்டிடத்தில் புயல் காலங்களிலும் மழை காலங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் அலுவலகத்திற்கும் ரேசன் கடைகளின் பொருட்களை வைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கட்டிடத்தின் சுவர்கள் விரிவடைந்து சேதம் அடைந்ததால் இந்த கட்டிடத்தை பயன்படுத்துவதை அரசு அலுவலகங்கள் நிறுத்தி விட்டன.

ஆதலால் இன்றைய தேதி வரை எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் புயல் பாதுகாப்பு கட்டிடம் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் மழை நீராலும், வெயிலின் தாக்கத்திலும் மேற்கொண்டு கட்டிடம் சேதமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் அருகே கிராம அலுவலர் அலுவலகம், வருவாய் அலுவலர் அலுவலகம்,கிராம சுகாதார அலுவலகம் உட்பட அரசு நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளது.

இந்நிலையில் இந்த அரசு அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் ஓய்வு எடுப்பதற்காக இந்த புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் நிழலுக்கு அமர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏதேனும் சூழ்நிலையில் கட்டிடம் சேதமடைந்து இடிந்து கட்டிடத்தின் உதிரி பொருள்கள் பொதுமக்கள் மேலே விழுந்து உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் புயல் பாதுகாப்பு கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேற்பகுதி உள்பட அனைத்து பகுதிகளையும் தரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கட்டிடம் தரம் அற்றது என பொறியாளர்கள் சான்று அளித்தால், இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடம் தரமானது என்றால், கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டிடத்தை சீரமைத்து காவல்துறையினர் தங்குவதற்கும் அல்லது உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த அலுவலகம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சோதனை சாவடி அமைத்து செயல்படவும் மற்றும் அரசு அலுவலகங்கள் நடத்துவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi